ஜெ. இருந்திருந்தால் நான் அமைச்சர்

ஜெ. இருந்திருந்தால் நான் அமைச்சர்

சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தற்போது உயிருடன் இருந்திருந்தால், தன்னை அமைச்சராக்கியிருப்பார் என்று கருணாஸ் எம்.எல்.ஏ., பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்து வந்த மணிகண்டனின் பதவி பறிக்கப்பட்டுவிட்டது.

முதல்வராக பதவியேற்ற 2 ஆண்டுகளில் முதல் முறையாக அமைச்சர் ஒருவர் நீக்கப்பட்டுள்ளார்.
இதற்கு காரணங்களாக இரண்டு விஷயங்கள் கூறப்படுகிறது.

அதாவது ஒன்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை விமர்சித்து பேசியது மற்றொரு மணிகண்டன் குறித்து கருணாஸ் எம்எல்ஏ புகார் மனு.

ராமநாதபுரத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகளை மணிகண்டன் மதிப்பதில்லை என்று அவர் மீது புகார் இருந்தது.

திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ., கருணாஸ், தான் அந்த தொகுதிக்குள் போக முடியாததற்கு மணிகண்டனே காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தினார்.

இது குறித்து கருணாஸ் கூறியிருப்பதாவது: அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டன் நீக்கப்பட்டதற்கு நான் தான் காரணம்.

ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் தன்னை அமைச்சராக்கிருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்