பெங்களூரு:
கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி அரசு மீதான பெரும்பான்மையை நிரூபிக்க மாலை 6 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.
ஆளுங்கட்சிக்கு அளித்த வாக்குகளை பதிவு செய்யும் பணி நிறைவடைந்த நிலையில், மெத்தம் 204 உறுப்பினர்களில் 99 உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
குமாரசாமி அரசுக்கு எதிராக 105 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனால் 6 வாக்குகள் வித்தியாசத்தில் தற்போதைய காங்கிரஸ் மஜத கூட்டணி அரசு தோல்வியடைந்தது.