பெங்களூரு:
கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார்.
கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமாவையடுத்து, முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பா.ஜ., கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தாமல் சபாநாயகர் காலம் தாழ்த்தி வந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சித்தராமையா, முதல்வர் குமாரசாமி ஒப்புக்கொண்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.