விழுந்து நொறுங்கிய ஆளில்லா விமானம்

விழுந்து நொறுங்கிய ஆளில்லா விமானம்

பெங்களூரு:

கர்நாடகாவில் ஆளில்லா விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் ஆளில்லா விமானம் இன்று காலை கர்நாடகாவின் சித்தரதுர்கா மாவட்டத்தின் ஜோடி சிக்கனாஹள்ளியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதனை அறிந்த கிராம மக்கள் அங்கு விரைந்தனர். ஆனால், விபத்துக்குள்ளான விமானத்தில் யாரும் இல்லாததால் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த டிஆர்டிஓ அதிகாரிகள் மற்றும் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆளில்லா விமானம் சல்லகேர் ஏராநாட்டிக்கல் சார்பில் சோதனை நடத்தப்பட்டதாக தெரியவருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்