கர்நாடகாவில் இடைத்தேர்தல் ஒத்திவைப்பு

கர்நாடகாவில் இடைத்தேர்தல் ஒத்திவைப்பு

புதுடெல்லி:

கர்நாடகாவில் வரும் அக்டோபர் 21ம் தேதி நடக்கவிருந்த 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 23ம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள், இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் மனுக்கள் மீது முடிவு செய்யும் வரை 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஒத்திவைக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்