இரவு முழுவதும் ரோட்டிலேயே..! எடியூரப்பா நூதன போராட்டம்..!!

இரவு முழுவதும் ரோட்டிலேயே..! எடியூரப்பா நூதன போராட்டம்..!!

பெங்களூரு:

கர்நாடக முன்னாள் முதல்வரும், பா.ஜ., மாநில தலைவருமான எடியூரப்பா நேற்று இரவு முழுவதும் ரோட்டிலேயே படுத்துறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

கர்நாடகாவின் சந்தூரில் உள்ள 3,600 ஏக்கர் அரசு நிலத்தை ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்துக்கு விற்பனை செய்வதற்காக அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் முறைகேடு இருப்பதாக்கூறி பா.ஜ., சார்பில் இரவு பகல் தர்ணா போராட்டம் பெங்களூரில் நடைபெறவுள்ளதாக அறிவித்தது.

இதனையடுத்து, சாலையில் போராட்டத்துக்கு அமைக்கப்பட்ட பந்தலில் எடியூரப்பா தலைமையில் பா.ஜ.,வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரவு முழுவதும் எடியூரப்பாவுடன் பா.ஜ.,வினர் பந்தலிலேயே உறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்