மழையின் கோரமுகம்.. தனி ஆளாக தவிக்கும் எடியூரப்பா

மழையின் கோரமுகம்.. தனி ஆளாக தவிக்கும் எடியூரப்பா

பெங்களூரு:
கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு குமாரசாமி தலைமையில் நடந்து வந்தது.

இந்த கூட்டணி அரசு கடந்த ஜுலை மாதம் 23ம் தேதி கவிழ்ந்தது. இதுனையடுத்து புதிய முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றார்.

ஆனால், அமைச்சரவை விரிவாக்கம் செய்யவில்லை. இதனை தொடர்ந்து டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை முதலமைச்சர் எடியூரப்பா சந்தித்தார்.

அவர் டெல்லியில் இருக்கும்போது கர்நாடகாவில் கனமழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் டெல்லி பயணத்தை பாதியில் முடித்துவிட்டு பெங்களூரு திரும்பினார் எடியூரப்பா.

வடகர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் பாதிக்கப்பட்ட பகுதியை சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆனால் அவரால் ஒரு நாளைக்கு ஒரு மாவட்டத்துக்கு மட்டும்தான் செல்ல முடிகிறது.
இதனால் அமைச்சரவை விரிவாக்கம் செய்யாததால் தனி ஆளாக போராடி வருகிறார். இதனால் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்