பெங்களூரு:
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ டாக்டர் சுதாகர் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்குபின் செய்தியாளர்களிடம் பேசிய சுதாகர், முதல்வராக பதவியேற்கும்போது நான் இல்லை. அதனால் தற்போது வாழ்த்து தெரிவிக்க நான் வந்தேன். மேலும், சிக்கபல்லாப்பூரில் நிலுவையில் உள்ள வளர்ச்சி திட்டங்களை பற்றி கோரிக்கை விடுத்துள்ளேன். முதல்வர் அதனை பரிசீலிப்பார் என நம்புகிறேன் என அவர் தெரிவித்தார்.