சென்னை:
நடிகர் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ படத்துக்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த கதாசிரியர் ஜான் சார்லஸ் என்பவர், ‘சரவெடி’ என்ற தலைப்பிலான தனது கதையை பயன்படுத்தி ‘காப்பான்’ படம் எடுத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் செப்டம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.