புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் ஆலோசனைக் கமிட்டியில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கபில்தேவ், சாந்தா ரங்கசாமி மற்றும் அன்ஷுமான் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இவர்கள் இந்திய அணியின் பயிற்சியாளர்களை தேர்ந்தெடுப்பர்.
இந்திய அணிக்கு பயிற்சியாளர்கள் பதவிக்காக விண்ணப்பம் வரும் 30ம் தேதியுடன் முடிவடைகிறது.