‘‘ஸ்டெர்லைட் ஆலையை மூடுவோம்’’ கனிமொழி பேட்டி..!

‘‘ஸ்டெர்லைட் ஆலையை மூடுவோம்’’ கனிமொழி பேட்டி..!

சென்னை:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் திமுக எடுக்கும் என கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில், பா.ஜ., தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனை எதிர்த்து போட்டியிட்ட, திமுகவின் கனிமொழி வெற்றிபெற்றார்.

இதனையடுத்து சென்னை திரும்பிய கனிமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுகவின் இந்த மாபெரும் வெற்றியானது கலைஞர் கொள்கைக்கும், ஸ்டாலின் உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி. இந்த வெற்றியை தமிழகத்தின் உரிமைக்காக பயன்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.

மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக திமுக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் எனவும், தூத்துக்குடி மக்களின் குரலாக என்னால் முடிந்த அளவுக்கு பணியாற்றுவேன் என கணிமொழி தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்