தலையில் தேங்காய்.. விநோத விழா

தலையில் தேங்காய்.. விநோத விழா

ஒசூர்:

ஓசூர் அருகே கனகதாசர் 532 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தலையில் தேங்காய் உடைக்கும் விநோத நிகழ்வு நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் குருபர் நல சங்கம் சார்பில் கனகஜோதி சேவா சமிதி சார்பில் கவி கனகதாசர் 532 வது ஜெயந்தி விழா நடைபெற்றது.

முன்னதாக குருபர் குல தெய்வங்களுடன் குருபர் கலாச்சார் கலை நிகழ்ச்சிகளாகிய டொல்லு குணிதா, வீரகாசை வீரபத்திர குணித, கனகதாசர் பல்லக்கு ஊர்வலத்துடன் பெண்கள் பூ கலசங்கள் ஏந்தி மேளதாளத்துடன் முக்கிய வீதிகளின் வழியாக தேன்கனிக்கோட்டை பஸ்நிலையம் வந்தடைந்தது.

இதனைத்தொடர்ந்து கனகதாசர் விழாவை முன்னிட்டு தலைமேல் தேங்காய்கள் உடைக்கும் விநோத வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது தலைமேல் தேங்காய்களை உடைத்து கொண்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மேலும் குலதெய்வம் சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. விழாவில் தேன்கனிக்கோட்டை சுற்றுபுர கிராமங்களை சேர்ந்தேர் திரளாக கலந்து கொண்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்