சென்னை:
வெங்காயத்தின் விலை ஏற்றம் தற்காலிகமானதுதான் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், காய்கறிகளின் விலையேற்றம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெங்காயத்தின் விலை ஏற்றம் தற்காலிகமானது தான்.
வெங்காய விற்பனைக்காக கூடுதல் பண்ணை பசுமை கடைகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.