கமல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க மறுப்பு..!

கமல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க மறுப்பு..!

மதுரை:

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்துக்களை பற்றிய சர்ச்சை பேச்சால், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன், உயர்நீதி மன்ற மதுரை கிளையில், மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசி வருவதால் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என்றும், இதனை அவசர மனுவாக ஏற்று விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் சரவணன் முறையிட்டார்.

இதனைத்தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் நிஷா பானு, தண்டபாணி அமர்வு முன் வந்தது. ஏற்கனவே இது தொடர்பான வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இது குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்துளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்