சென்னை:
தேச விரோத சக்திகளின் வீழ்ச்சியின் தொடக்கம் இது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில், தேச விரோத சக்திகளின் வீழ்ச்சியின் தொடக்கம் இது,
சாதிப்பிரிவுகள் சொல்லி அதில் தாழ்வென்றும் மேலன்றும் சொல்வார்
நீதிப்பிரிவுகள் செய்வார் – அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்
சாதிக்கொடுமைகள் வேண்டா அன்பு
தன்னில் செழித்திடும் வையம்.
102 ஆண்டுகளுக்கு முன் பாரதி சொன்னது இது.
நம் படையோடு மோத வழியில்லை என்று தெரிந்து கொண்டு,நம் கால்களுக்கிடையில் பாம்புகளை விடுகிறார்கள். பாம்பைக் கண்டு பயப்படும் படையல்ல எங்கள் இளைஞர் கூட்டம் என்பதை உரக்க சொல்ல வேண்டிய நேரமிது.
சர்வாதிகாரத்துக்கு எதிராக சுதந்திர காற்றை சுவாசிக்க ஜனநாயக ஆற்றில் மூழ்கி தான் எழ வேண்டும்.கரம் கோர்த்து தலை முழுகுவோம் இவர்களை. தாய் திருநாட்டின் இப்பிணிகளை. தேச விரோத சக்திகளின் வீழ்ச்சியின் தொடக்கம் இது என அவர் தெரிவித்துள்ளார்.
கரம் கோர்த்து தலை முழுகுவோம் இவர்களை. தாய் திருநாட்டின் இப்பிணிகளை.
தேச விரோத சக்திகளின் வீழ்ச்சியின் தொடக்கம் இது. (15/15)
– உங்கள் நான் pic.twitter.com/ff7X3SXTN2
— Kamal Haasan (@ikamalhaasan) December 17, 2019