‘‘ஜெனரேட்டர் வைத்தாலும் பழுதான் தமிழக அரசை இயக்க முடியாது’’ – கமல்

‘‘ஜெனரேட்டர் வைத்தாலும் பழுதான் தமிழக அரசை இயக்க முடியாது’’ – கமல்

சென்னை:

பழுதடைந்துள்ள தமிழக அரசை டெல்லியிலிருந்து ஜெனரேட்டர் வைத்தாலும் இயக்க முடியாது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய கமல், தற்போது நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள மறுவாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கிறோம் என்ற பெயரில், சீல் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்கு இயந்திரங்கள் உள்ள அறைகளை திறக்க கூடாது. தேர்தல் ஆணையம் நடுநிலைமையோடு செயல்பட வேண்டும் என்றார்.

மதுரை உயிர் பலி தொடர்பாக அவர் தெரிவிக்கையில், மதுரையில் பேட்டரி பழுது, ஜெனரேட்டர் இல்லாததால் மின் தடை ஏற்பட்டு உயிர் பலிகள் நிகழ்ந்துள்ளது. இந்த அரசே பழுதாகித்தான் இருக்கிறது என்பதை இச்சம்பவம் நிரூபிக்கிறது.

டெல்லியிலிருந்து ஜெனரேட்டர் வைத்து இயக்கினாலும், பழுதடைந்துள்ள தமிழக அரசை இயக்க முடியாது என கமல் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்