சென்னை:
சென்னையில் உள்ள மறைந்த சிவாஜிகணேசனின் வீடான அன்னை இல்லத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு பிரபு விருந்தளித்து உபசரித்தார்.
அப்போது நடிகர் பிரபு, கமல்ஹாசனுக்கு ஒரு வாழ்த்து கவிதையை வாசித்தார்.
அதில்,
‘‘அரிதாரம் முதல்தாரம் ஆன நடிப்பின் அவதாரம் திரு.சிவாஜி
அவர் வெள்ளித்திரை விஞ்ஞானி
அவரின் தலைமகன் நீ கலைஞானி!
நடிகர் திலக நாயகனே பாராட்டிய உலக நாயகனே!
நீ நடிப்பை ஆண்டு, ஆனது அறுபது ஆண்டு!
நீ ஊரை ஆண்டு, உலகை ஆண்டு
வாழ்ந்திடுக நூறாண்டு!’’
என புகழ் பாராட்டினார்.
மேலும் சிவாஜிகணேசன் குடும்ப உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.