கமலின் வீடு, அலுவலத்துக்கு பாதுகாப்பு..!

கமலின் வீடு, அலுவலத்துக்கு பாதுகாப்பு..!

சென்னை:

அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும், மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமலின் வீடு மற்றும் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி தொகுதியில் பள்ளப்பட்டி பிரச்சார கூட்டத்தில் பேசிய கமல், இஸ்லாமியர்கள் அதிகம் பேர் இருக்கும் இடம் என்பதால் சொல்லவில்லை; காந்தி சிலைக்கு முன் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து அவர் பெயர் கோட்சே என்றார். மேலும் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரனாக, அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருப்பதாக கூறியிருந்தார்.

இந்த பேச்சுக்கு, பா.ஜ.., தமிழக தலைவர் தமிழிசை உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவிக்கையில், இந்து மதத்தை பற்றி பேசிய கமலின் நாக்கை அறுக்க வேண்டும் மிரட்டல் விடுத்தார்.

பா.ஜ., மூத்த தலைவராஜ சுப்பிரமணிய சுவாமியும், அவ்வாறு பேசிய கமல்ஹாசனை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அசாம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க, கமலின் ஆழ்வார்பேட்டை அலுவலகம் மற்றும் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்