கல்பனா சாவ்லா விருது..! விண்ணப்பங்கள் வரவேற்பு..!

கல்பனா சாவ்லா விருது..! விண்ணப்பங்கள் வரவேற்பு..!

சென்னை:

தமிழக அரசின் துணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு, தகுதியுடைய பெண்கள் ஜூன் 30ம் தேதிக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த விருதுக்கான தகுதியானவர்களை தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தேர்வுசெய்யப்படுவார்கள் என தமிழக அரசு அளிவித்துள்ளது.

கல்பனா சாவ்லா விருது என்பது ஆண்டுதோறும் தமிழக அரசு அளிக்கும் விருதுகளில் ஒன்றாகும். இந்தியாவில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்ற விண்வெளி வீரங்கனை கல்பனா சாவ்லாவின் நினைவாக தமிழ்நாட்டில் வீர, தீர, சாகசச் செயல் புரியும் இளம் பெண்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்