2ம் நாள் ஐடி ரெய்டு; ரூ.29 கோடி பறிமுதல்

2ம் நாள் ஐடி ரெய்டு; ரூ.29 கோடி பறிமுதல்

சித்தூர்:

ஆந்திராவில் உள்ள கல்கி ஆசிரமத்தில் வருமானவரித்துறை 2ம் நாள் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.29 கோடி மற்றும் ரூ.9 கோடி அமெரிக்க டாலர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள கல்கி ஆசிரமத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், கோவர்த்தனபுரத்தில் கல்கி மகன் கிருஷ்ணனுக்கு சொந்தமான அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகவும், தமிழகம், ஆப்பிரிகாவில் அதிகளவில் நிலம் வாங்கியதும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை நேற்று தெரிவித்தது.

இந்நிலையில், வரதாய பாளையத்தில் உள்ள கல்கி ஆசிரமத்தில் 2ம் நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் இதுவரை ரூ.29 கோடி பணமும், ரூ.9 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்