பெங்களூரு:
கர்நாடக சபாநாயகராக விஷ்வேஸ்வர ஹெக்டே காகேரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் ராஜினாமா செய்ததையடுத்து, புதிய சபாநயாகர் தேர்வுக்கு நேற்று மனுதாக்கல் நடைபெற்றது. இதில் பா.ஜ., சார்பில், எம்எல்ஏ விஷ்வேஸ்வர் ஹெக்டே காகேரி மனு தாக்கல் செய்தார்.
இதனையடுத்து, இன்று நடந்த பரிசீலனையில், இவர் ஒருவரை தவிர வேறுயாரும் மனுதாக்கல் செய்யாததால் ஒருமனதாக காகேரி சபாநாயகராக தேர்ந்தெடுப்பட்டுள்ளார்.