ரத்லம்:
மக்களைவை தேர்தல் பிரச்சாரத்தில், பிரியங்கா காந்தி தமது ஆதரவாளர்களுடன் செல்பி எடுப்பதற்காக தடுப்புக்களை தாண்டி குதித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தியை அறிவித்தது முதல் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக கவனிக்க தொடங்கினார்.
இந்நிலையில், மத்திய பிரசேதசம், ரத்லம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரியங்கா காந்தி, அவரை காணவந்த ஏராளமான தொண்டர்களுடன் செல்பி எடுப்பதற்காக அங்கு வைத்திருந்த தடுப்புக்கள் மீது ஏறி குதித்து செல்பி எடுத்துக்கொண்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் தற்போது பரவி வருகிறது. இந்த சம்பவம் இந்திரா காந்தியை நினைவுபடுத்தும் வகையில் உள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.