பெங்களூரு:
கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார்.
அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் பரபரப்பான சூழ்நிலவிவருகிறது. மேலும் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, விவாதம் எதுவுமின்றி சட்டப்பேரவை இன்று முதல் புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.