பேட்டால் அதிகாரிக்கு அடி..! எம்எல்ஏ.,வுக்கு 7ம் தேதி வரை நீதிமன்ற காவல்!!

பேட்டால் அதிகாரிக்கு அடி..! எம்எல்ஏ.,வுக்கு 7ம் தேதி வரை நீதிமன்ற காவல்!!

இந்தூர்:

மாநகராட்சி அதிகாரியை பேட்டால் அடித்த பா.ஜ., எம்எல்ஏ.,வுக்கு ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் ஆக்கிரமிப்பு பணியில் மாநகராட்சி ஆணைய அதிகாரிகள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த எம்எல்ஏவும், பா.ஜ., மூத்த தலைவருமான கைலாஷ் விஜய்வர்கியாவின் மகனுமான ஆகாஷ் விஜய்வர்கியா, அந்த அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் தாக்கி விரட்டி அடித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரியை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து பாஜக எம்.எல்.ஏ ஆகாஷ் விஜய் வர்க்கியா கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட பா.ஜ., எம்எல்ஏ., ஆகாஷ் விஜய்வர்கியாவை ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்