புதுடெல்லி:
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு வரும் 17ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் நீதிமன்றக்காவல் இன்றோடு முடிவடைந்த நிலையில், திகார் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் ப.சிதம்பரம் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.