பத்திரிகையாளரை தாக்கிய விசிகவினர்

பத்திரிகையாளரை தாக்கிய விசிகவினர்

ராணிப்பேட்டை:

திருமாவளவனை கடுமையாக விமர்சித்த பத்திரிகையாளர் ஒருவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அடித்து நொறுக்கினர்.

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் ‘கலைஞர் பாதை’ என்ற பெயரில் மாத இதழ் நடத்திவருபவர் குணசேகரன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் நட்பாக பழகிவந்த அவர், சமீபத்தில் திருமாவளவன் இந்து மத கடவுளை விமர்சித்ததாக தனது டுவிட்டர் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், பத்திரிகையாளர் குணசேகரனை ராணிப்பேட்டைக்கு வரவழைத்து விசிக.,வினர், சரமாரியாக தாக்கியுள்ளனர். காயங்களுடன் அவர்களே விடுவித்தும் உள்ளனர்.

விசிக.,வினர் மீது குணசேகரன் புகார் அளித்த நிலையில், நேற்று முன்தினமே குணசேகரன் மீது அவதூறு பரப்பியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்த வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்