புதுடெல்லி:
இந்திய அணிக்கான பீல்டிங் பயிற்சியாளராகிறார் தென்னாப்பிரிக்காவின் ஜான்ட்டி ரோட்ஸ்.
இந்திய அணிக்கான தலைமை பயிற்சியாளர்கள் உள்ளிட்ட தேர்வுகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில், தென்னாப்ரிக்காவின் தலைசிறந்த பீல்டராக கொண்டாடப்படும் ஜான்ட்டி ரோட்ஸ் விண்ணப்பித்துள்ளதாக பிசிசி தரப்பில் உறுதி செய்துள்ளது.
மேலும், இவர் மட்டுமல்லாது இன்னும் சிலரும் பீல்டர் பயிற்சியாளருக்கு விண்ணப்பித்துள்ளனர். பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ஜூலை 30ம் தேதி கடைசி நாளாகும்.
இந்நிலையில் அதிக திறமை வாய்ந்த ஜான்ட்டி ரோட்ஸ் பீல்டிங் பயிற்சியாளராக தேர்வாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.