சென்னை:
நடிகை மீரா மிதுன் மீது போலீசில் புகாரளித்த ஜோ மைக்கேலை போலீசார் கைது செய்துள்ளனர்.
‘பிக்பாஸ் 3’ போட்டியாளரும், மாடல் அழகியுமான நடிகை மீரா மிதுன் மீது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜோ மைக்கேல் புகாரளித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து இருவரும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக சாடிக்கொண்டனர். மீரா மிதுன் மிஸ் தமிழ்நாடு நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரராக செயல்பட்டுள்ளார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் பெண்கள் குறித்து இழிவாக வீடியோ வெளியிட்டதாக ஜோ மைக்கேல் மீது அடையாறு போலீசில் புகாரளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அடையாறு மகளிர் போலீசார் விசாரணைக்காக இரு முறை சம்மன் அனுப்பியும், ஜோ மைக்கேல் ஆஜராகததால், அடையாறு மகளிர் போலீசார் விசாரணைக்கு வருமாறு வீட்டுக்கு சென்று அழைத்தனர்.
அப்போது பெண்காவலர்களை ஜோ மைக்கேல் பிரவீன் தரக்குறைவாக பேசி தாக்கியுள்ளார். இது தொடர்பாக கொலை மிரட்டல் விடுத்தல், மானபங்கம் செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஜோமைக்கல் பிரவீன் மீது வழக்கு போடப்பட்டது. அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.