ஜெஎன்யூ மாணவர்கள் கடும் போராட்டம்

ஜெஎன்யூ மாணவர்கள் கடும் போராட்டம்

புதுடெல்லி:

கட்டண உயர்வை கண்டித்து ஜெஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தங்கும் அறைக்கு ரூ.10லிருந்து ரூ.300 வரையிலும், டபுள் ரூம் ரூ.20லிருந்து ரூ.600 வரையிலும், திரும்பப்பெறதக்க மெஸ்சிற்கான முன்பணம் ரூ.5,500லிருந்து ரூ.12,000ஆக கட்டணங்களை உயர்த்தி அறிவித்துள்ளது.

இந்த கட்டண உயர்வை கண்டித்தும், திரும்பப்பெறக்கோரியும் டெல்லியில் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் கடும் போராட்டத்தையடுத்து, அங்கு துணை ராணுவத்தினரும், போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், துணை குடியரசுத்தலைவர் கலந்துகொண்ட பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடக்கும் இடத்தை நோக்கி பேரணியாக சென்ற மாணவர்கள் உள்ளே நுழைய முயன்றனர். இதனையடுத்து போலீசார் தண்ணீர் பீய்ச்சியடித்து மாணவர்களை கலைத்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்