புதுடெல்லி:
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த மோதல் மற்றும் தாக்குதல் குறித்து டெல்லி போலீசார் இன்று விசாரணையை துவக்கியுள்ளனர்.
டெல்லியில் உள்ள ஜெவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் நேற்று முன்தினம் மாலை அமைதி பேரணியில் பங்கேற்றிருந்தனர். அப்போது, முகமூடிகளை அணிந்தபடி வந்த மர்ம நபர்கள், இரும்பு கம்பி உள்ளளிட்ட ஆயுதங்களால் மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கினர்.
இந்த தாக்குதலில் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அய்ஷே கோஷ் உள்ளிட்ட ஏரளாமான மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த மாணவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
இந்தநிலையில், பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்த டெல்லி போலீசார் குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழுவினர் இன்று ஜேஎன்யு பல்கலைக்கழகத்திற்கு வந்து மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.
மோதல் நடந்த விவரம், தாக்கிய நபர்கள் குறித்த அடையாளம், குறித்து விசாரித்தனர். மேலும் மாணவர்கள் வைத்திருந்த ஆதாரங்களையும் அவர்கள் பெற்றுக்கொண்டனர்.
Delhi: A team of Forensic Science Laboratory (FSL) arrives at Jawaharlal Nehru University to conduct investigation into January 5 violence at the university. pic.twitter.com/gg8yfaVjjk
— ANI (@ANI) January 7, 2020