ஜெஎன்யூ கட்டண உயர்வு வாபஸ்

ஜெஎன்யூ கட்டண உயர்வு வாபஸ்

புதுடெல்லி:

மாணவர்களின் பெரும் போராட்டத்துக்குபின், ஜவஹர்லால் நேரு பல்லைககழகம் கட்டண உயர்வை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.

புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கல்விக்கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி அறிவித்தது. இதனை எதிர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த இரு நாட்களாக போராட்டம் சூடுபிடித்த நிலையில், போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் தண்ணீரை பீய்ச்சி அடித்து மாணவர்களை போலீசார் கலைத்தனர்.

இந்நிலையில், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கல்வித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்த விடுதிக் கட்டண உயர்வு மற்றும் மற்ற சில கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு பொருளாதார உதவி அளிப்பதற்கான திட்டமும் முன்னெடுக்கப்படுகிறது. வகுப்புக்கு திரும்ப வேண்டிய நேரம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்