புதுடெல்லி:
கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டித் தொடரிலிருந்து, காயம் காரணமாக இந்திய வீரரான ஜீஜே விலகினார்.
அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெறும் கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டி தொடர் நடக்கவுள்ளது. இந்த தொடரில் விளையாட பயிற்சி முகாம் டெல்லியில் நடக்கவுள்ளது.
இந்நிலையில், இந்த போட்டியின் 37 பேர் கொண்ட உத்தேச அணியை இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாச் அறிவித்தார். அதில், முழங்கால் காயம் காரணமாக ஜீஜே தேர்வு செய்யப்படவில்லை. இவருக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது குறிப்பிடப்பட்டிருந்தது.