இறுதி கட்டத்தை எட்டியது ஜான்சன் அண்ட் ஜான்சனான் தடுப்பூசி

இறுதி கட்டத்தை எட்டியது ஜான்சன் அண்ட் ஜான்சனான் தடுப்பூசி

அமெரிக்க மருந்து நிறுவனமான ஜான்சன் & ஜான்சனின் ஒரு முறை செலுத்தும் கொரோனா தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனை நேற்று (செப்.,23) தொடங்கியது.ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து இரண்டு கட்ட பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. விலங்கு மற்றும் மனித பரிசோதனைகள் ஆகிய இரண்டிலும் பாதுகாப்பான முறையில் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்தன. இந்நிலையில் இறுதி கட்ட சோதனையை நிறுவனம் புதனன்று தொடங்கியது. சுமார் 60 ஆயிரம் நபர்களிடம் மூன்றாம் கட்ட பரிசோதனை நடைபெறும் என அந்நிறுவன தலைமை விஞ்ஞானி டாக்டர் பால் ஸ்டோஃபெல்ஸ் கூறியுள்ளார்.மாடர்னா, ஃபைசர் மற்றும் அஸ்ட்ராஜெனகா போன்ற போட்டி தடுப்பூசிகள் அனைத்தும் குறிப்பிட்ட வாரங்களுக்கு இடையே இரண்டு முறையாக செலுத்தப்பட வேண்டும்.ஆனால் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி ஒரு முறை மட்டுமே செலுத்தினால் போதுமானது என அந்நிறுவனம் கூறுகிறது. இதன் மூலம் இதனை எளிதாக மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கலாம் என்கின்றனர்.மூன்றாம் கட்ட ஆய்வு நெறிமுறைகளை ஜான்சன் & ஜான்சன் தங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. வெளிப்படைத்தன்மைக்காக இவ்வாறு செய்துள்ளனர். தற்போது தொடங்கியுள்ள மூன்றாம் கட்ட சோதனை இந்தாண்டு இறுதியில் முடிவடையும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 1 பில்லியன் டோஸ் தடுப்பு மருந்து உற்பத்தி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்