82 பவுன் நகை பறிமுதல்

82 பவுன் நகை பறிமுதல்

ஓசூர்:

ஓசூர்  சுற்றுவட்டார பகுதிகளிள் தொடர் திருட்டில் ஈடுபட்ட தந்தை, மகன் கைது, அவரிடமிருந்து 20 லட்சம் மதிப்பிலான 82 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டன.

ஓசூர் டவுன் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார், நேற்று முன்தினம் மாலை, தளி ரயில்வே கேட் ஜங்ஷன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பல்சர் பைக்கில் வந்த இருவரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை அளித்ததால், டவுன் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில், கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், மாலுார் அடுத்த சந்தஹள்ளி அருகே உள்ள திருமலட்டி கிராமத்தை சேர்ந்த தர்மா என்ற ராஜூ, 23, மற்றும் அவரது தந்தை பிரகாஷ், 48, என்பதும், தற்போது பேரிகை அடுத்த சொன்னேபுரம் கிராமத்தில் பிரகாசும், ஓசூர் வாசவி நகர், 3 வது குறுக்கு தெருவில், தர்மா வசித்து வருவதும், ஓசூர் முனீஸ்வர் நகர், அலசநத்தம் ரோடு, குறிஞ்சி நகர், காரப்பள்ளி, அபிராமி கார்டன், ராயக்கோட்டை அடுத்த ஒடையாண்டஹள்ளி ஆகிய, 6 இடங்களில், பூட்டிய வீடுகளை உடைத்து, நகை மற்றும் பணத்தை திருடியது தெரிந்தது.

அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 82 பவுன் தங்க நகை மற்றும் 200 கிராம் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்