செங்கம்:
நகை கொள்ளை வழக்கில் தேடப்பட்டுவந்த சுரேஷ் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
திருச்சி லலிதா ஜுவல்லரியில் பல கோடி ரூபாய் வைர நகைகள் கொள்ளையடித்து சென்ற கும்பலை திருவாரூரில் கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த கும்பலைச் சேர்ந்த சிராத்தோப்பு சுரேஷ் மட்டும் தப்யோடியதால் அவரை தேடி வந்த நிலையில், திருவாரூர் சிராத்தோப்பு பகுதியை சேர்ந்த சுரேஷ் (28) என்பவர் செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதி விக்னேஷ் பிரபு முன்பு சரணடைந்தார்.