புதுடெல்லி:
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் நெருக்கடி காரணமாக கடந்த மாதம் தனது அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்தது. இதனால், சுமார் 16,000 பேர் வேலை இழந்தனர்.
இதனைத்தொடர்ந்து, ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழக்கக்கோரியும், விமான சே¬வையை மீண்டும் தொடங்க கோரியும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள உள்நாட்டு விமான அமைச்சகரத்தை ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் முற்றுகையிட்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.