ஜெட் ஏர்வேஸ் திவால் நடவடிக்கை தொடங்கியது!

ஜெட் ஏர்வேஸ் திவால் நடவடிக்கை தொடங்கியது!

புதுடெல்லி:

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு எதிரான திவால் நடவடிக்கையை தற்போது தொடங்கப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடனில் மூழ்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடும் நிதி நெருக்கடி காரணமாக கடந்த ஏப்ரல் 17ம் தேதி முதல் சேவையை நிறுத்தியது.

இந்த நிறுவனம் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் 8,500 கோடி. இந்த நிறுவனத்தை மீட்க முடியாததால், கடன் வழங்கிய பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் குழு, மும்பையில் உள்ள தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயத்தில் திவால் நடவடிக்கைக்காக மனு தாக்கல் செய்தது.

இதை தீர்ப்பாயம் ஏற்றது. இதை தொடர்ந்து, திவால் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு விட்டதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்