துலே:
மகாராஷ்டிராவில் பாலத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிராவின் துலே அருகே உள்ள வின்சூர் ஆற்றுப்பாலத்தில், ஜீப் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை நடந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.