பெங்களூரு:
கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் 3 பேரை கட்சியிலிருந்து நீக்குவதாக மஜத அறிவித்துள்ளது.
கர்நாடக மஜத எம்எல்ஏக்களான கோபாலய்யா, எச்.விஸ்வநாத் மற்றும் நாராயண கவுடா ஆகியோர் குமாரசாமி அரசுக்கு எதிராக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மும்பை சென்றனர். இதனையடுத்து பெரும்பான்மையில் இல்லாததால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் முதல்வராக பாஜ.,வின் எடியூரப்பா பதவியேற்றார்.
இவர்கள் 3 பேரும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்த நிலையில், அவர்கள் கட்சிக்கு எதிராக நடந்துகொண்டதாக கட்சியிலிருந்து நீக்குவதாக மஜத கட்சி இன்று அறிவித்துள்ளது.