பா.ஜ.,வில் இணைந்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

பா.ஜ.,வில் இணைந்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

புதுடெல்லி:

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாஜ.,வில் அதிகாரப்பூர்வமாக இன்று இணைந்தார்.

மக்களவைத் தேர்தலில் பா.ஜ., கூட்டணி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஜெய்சங்கருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத ஜெய்சங்கர், குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியில் பா.ஜ., தேசிய செயல்தலைவர் ஜே.பிநட்டாவை சந்தித்த ஜெய்சங்கர், தன்னை பா.ஜ.,வில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக்கொண்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்