ஜெ., நினைவு நாள்; ஒசூரில் அஞ்சலி

ஜெ., நினைவு நாள்; ஒசூரில் அஞ்சலி

ஒசூர்:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மூன்றாமாண்டு நினைவு நாளில் ஓசூர் பகுதி அதிமுகவினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுபகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினர் மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் மூன்றாமாண்டு நினைவுநாளை அனுசரித்தனர்.

தங்கத்தாரகை, இரும்பு பெண்மணி என உலகம் முழுவதும் அறியப்பட்டவர், அரசியலில் பெண்கள் பங்களிப்பு குறைவு என பேசப்படவர்கள் மத்தியில் 6 முறை தமிழகத்தின் முதல்வராகவும், அவரின் அதிமுக கட்சியை இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக வளர்த்திக்காட்டியவர் ஜெயலலிதா.

எதற்கும் அஞ்சாதவராக விளங்கிய இவர் 2016 ஆம் ஆண்டு, முதல்வராக இருந்தபோதே உயிரிழந்தார், இவரின் மூன்றாமாண்டு நினைவு நாளான இன்று கட்சிகளை கடந்து பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஓசூர்,தளி,கெலமங்கலம் ஆகிய ஒன்றியங்களில் கிராமங்கள் தோறும் ஏராளாமான பகுதிகளில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி தலைமையில் மறைந்த அம்மாவின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூர், மௌன அஞ்சலியையும் செலுத்தினர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்