சென்னை:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் கலைமாமணி விருது வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
மூத்த கலைஞர்களுக்கான உதவித்தொகை ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் எனவும், கலைமாமணி விருது 3 சவரனுக்கு பதிலாக, 5 சவரன் உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.