சென்னை:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க உரிமை கோரி வழக்கு தொடர்ந்ததை உறுதி செய்வதற்காக, தீபா, தீபக் வரும் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது? ஜெயலலிதா சொத்து தொடர்பாக வழக்கு தொடர்ந்தது உண்மைதானா? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க உரிமை கோரி வழக்கு தொடர்ந்ததை உறுதி செய்வதற்காக தீபா, தீபக் ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.