பேனர் ஜெயகோபாலன் கைதான சொகுசு ஓட்டல்

பேனர் ஜெயகோபாலன் கைதான சொகுசு ஓட்டல்

ஒசூர்:

சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான வழக்கில், ஜெயகோபால் நேற்று ஒசூர் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் கடந்த 12ம் தேதி, பள்ளிகரணியில் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். இதுகுறித்து தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிமுகவை சேர்ந்த ஜெயகோபாலை இதுவரை கைது செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பியது. மேலும், ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால் போலீசார் கைது செய்யாமல் உள்ளதாக எதிர்கட்சிகள் விமர்சித்தன.

இந்நிலையில், கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக காவல்துறையினர் தேடிவந்த நிலையில், அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலன் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே மல்லிகை பார்ம் என்னுமிடத்தில் தன்னுடைய மனைவி மகன் மற்றும் ஆபிரகாம் கான் அவரது மனைவி என ஐந்து பேர் நேற்று முன்தினம் இரவு தனியார் விடுதியில் ஆபிரகாம் கான் என்ற பெயரில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

தகவலறிந்து வந்த சென்னை போலீசார், தனியார் விடுதி நுழைவாயிலேயே ஜெயகோபாலனை அதிரடியாக கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்