சென்னை:
சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழக்க காரணமான பேனர் வைத்த ஜெயகோபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமாக, சாலையில் பேனர் வைத்த ஜெயகோபால், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
இதில், பேனர் வைத்த ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.25,000 வழங்க வேண்டும்.
ஸ்டான்லி மருத்துவமனைக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை உத்தரவிட்டுள்ளது.