நடுவரை எதிர்த்த இங்கி., வீரருக்கு அபராதம்!

  • In Sports
  • July 12, 2019
  • 176 Views
நடுவரை எதிர்த்த இங்கி., வீரருக்கு அபராதம்!

லண்டன்:

போட்டியில் நடுவரை எதிர்த்து பேசிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேசன் ராய்க்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து தொடக்க வீரரான ஜேசன் ராய் அதிரடியாக விளையாடினார். 85 ரன்கள் அடித்த நியைலில், சதத்தை நோக்கி விளையாடியபோது, வீக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி கேட்ச் அவுட் கேட்டு முறையிட்டார். நடுவர் தர்மசேனா அவுட் என்று கையை உயர்த்தி விட்டார்.

உடனே ஜேசன் ராய் பந்து பேட்டில் படவில்லை என்று கூறி நடுவரிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது மற்றொரு நடுவர் சமாதானம் படுத்தியபின் கோபத்துடன் வெளியேறினார். டி.வி. ரீப்ளேவில் பந்து பேட் மற்றும் கையுறையில் உரசவில்லை என்பது தெரிந்தது.

இந்நிலையில், இதுதொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜேசன்ராய்க்கு 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஒழுங்கு நடவடிக்கையில் இரண்டு தகுதி இழப்பு புள்ளிகளும் வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்