மதுரை:
பொங்கல் பண்டியையொட்டி மதுரையில் மல்லிப்பூ கிலோ ரூ.4000க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், மதுரை மாட்டுத்தாவணியில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் அங்கு கடும் பனிப்பொழிவு ஏற்படுவதால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது.
இந்நிலையில், மல்லிகைப் பூ ரூ.4,000க்கும், முல்லைப்பூ ரூ.2,000க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.1,500க்கும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பூக்களின் வரத்து குறைந்தால், இன்னும் விலை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.