ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்!

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்!

டோக்கியோ:

ஜப்பானில் மியாசக்கி என்ற இடத்தில் மீண்டும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானின் தென்கிழக்கு பகுதியான மியாசக்கி ஷூகி என்ற இடத்தில், இன்று காலை கடலுக்கு அடியில் 24 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவாகி இருந்தது. பின்னர் ஒரு மணி நேர இடைவெளியில், அதே இடத்தில் 44 கி.மீ. ஆழத்தில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. இதனால் எற்பட்ட உயிர்சேதம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இங்கு சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்