அனந்த்நாக்:
ஜம்மு காஷ்மீரில் போலீசார் மீது பயங்கரவாதிகள் பயங்கர தாக்குதல் நடைபெற்று வருகிறது.
ஜம்முகாஷ்மீரின் அனந்த்நாக்கில் உள்ள பேருந்து நிலையம் அருகே போலீசார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் போலீஸ் அதிகாரி உள்ளிட்ட சிஆர்பிஎப் வீரர்கள் 5 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சிறப்பு பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்துள்ளனர்.
கே.பி.ரோடு அருகே பயங்கரவாதிகள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.