ஜம்மு காஷ்மீரில் 28,000 கூடுதல் ராணுவம்

ஜம்மு காஷ்மீரில் 28,000 கூடுதல் ராணுவம்

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புக்கா கூடுதலாக துணை ராணுவப்படைகள் 28,000 பேர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சுதந்திர தினம் நெருங்குவதால், ஜம்மு காஷ்மீரில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதன் அடிப்படையில், ஜம்மு காஷ்மீருக்கு 10,000 துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது கூடுதலாக 280 கம்பெனி துணை ராணுவப்படையினர் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் முக்கிய இடங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் ராணுவம் கொண்டுவந்துள்ளது. திடீரென பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், அம்மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்